Tuesday, November 8, 2011

எதற்காக
காதல் கவிதைகளையே எழுதுகிறாய் என்று கேட்கிறார்கள்
எப்படி சொல்வேன்
காணமல் போன இதயத்தை
கண்டு பிடிக்கத்தான் இந்த கவிதை விளம்பரமென்று...!

Saturday, October 29, 2011

இலையுதிர் கால சருகுகளாய்
எனக்குள் நீ
விழுந்துகொண்டே இருக்கிறாய்
மீண்டும் மீண்டும் முளைப்பதற்காக...!!
காத்திரு.....!
வேகமாய் புறப்பட்டுவிட்டேன்

உன்னை அடைவதற்கு,-ஆம்

மறக்கச்சொன்னாய்

எதை என்பதை கேட்பதற்காக,

என்னை என்றால்
எப்போதோ மறந்துவிட்டேன்;

உன்னை என்றால்
என் மரணம் வரை காத்திரு...!
பெண்ணே....!
இன்னும் அதிகமாக
என்னை காயப்படுத்து,
என் கண்ணீர்த்துளிகளை
சந்தோசப்படுத்த....!
எளிதில்
தீப்பற்றக்குடிய பொருட்களை
பேருந்தில்
ஏற்ற வேண்டாமென்று சொல்லிவிட்டு
ஏனோ?
இத்தனை பெண்களை ஏற்றிச்செல்கிறது
இந்த பேருந்து...!
பெண்களின் சிரிப்பைவிட
இந்த சிகரட் நெருப்பின் எருச்சல்
எவ்வளவோ மேலானது....!
என்னருகில் நீ இருக்க,
எனக்கெதற்கு
இன்னொரு வானம்
இன்னொரு பூமி..!

சொர்க்கம் தூரமென்று
சொன்னவர்கள் யாரோ?

நீ பக்கம் வந்து நின்றால்
சொர்க்கம் எனக்கு கண்ணெதிரே - அடி பெண்ணே,
நீ வெட்கம் காட்டிச்சென்றல்
நிக்குமடி என்மூச்சு உன்னெதிரே..!
இறவை அழைக்கிறேன்
உறக்கத்திற்கு
கனவைத் தருகிறது உன் நினைவாக!

யாரடி சொல்லித்தந்தார்கள் உனக்கு ?

நடை பாதையில் கண்ட போதெல்லாம்
நான் நானப்படுவேன்
உன் முகம் பார்த்துப்பேச
உன் புன்னகையை எனக்களித்து
என் நாணம் பரித்தவளா நீ ?
இப்போது
எனைப்பார்க்கையில்
யாரென்று கேட்கிறாய் ?

முன்னம் ஒருமுறை
என் முகம் பார்க்க அழைத்தாய்
பின்பு ஒருமுறை
அன்னம் கூட எனக்களித்தாய்
இப்படியெல்லாம்
என் எண்ணம் பறித்துவிட்டு
எப்படியடி சொல்லிப்போனாய்
நீ யாரென்று தெரியவில்லையென்று?.

சரிப்போ........

நடந்துப்போனோம்
ஞாபகம் இருக்கிறதா ?
நனைந்தபடி
நம் கல்லூரிப்பாதையில்?

விடுமுறை நாளொன்றில்
விருந்தளித்தையே
உன் கை பேசி வழியே
அதுவும் மறந்து போனதோ உனக்கு ?

ம்ம்ம்ம் .................

புரிந்துப்போனதடி
நீ பூமிக்கு மேலே வானமாய் இருக்கிறாய்,
நான் இன்னும்
பூமியின் மீது புழுதியை இருக்கிறேனென்று..........................!
என் காதலியின் ஆசை
என் காதலின் கடைசி ஆசை..!
அவளின் மண முடிப்பிற்க்கு,
அவள் வாங்கித்தந்த சட்டையை மணந்து வரச்சொன்னாள்...!
உடைந்து போன
என் இதயத்தின் அழுகையை
என் பேனா உணருதடி,
கண்ணீர் சிந்துகிறது கவிதையாய் இங்கே!
தாகம் தீர்க்க வேண்டாம் நீ
தானம் தந்துவிட்டுப்போ உன் பார்வையை
ஒருமுறை போதும்.....
பதில் வராத
வாக்கியத்திற்கு வார்த்தைகள் அமைத்தே
வடிவம் மறைந்து போனது
என் கைபேசியின் எழுத்துக்களுக்கு...!

Friday, October 28, 2011

வலிகள்
அதிகம் கண்ணட விழிகளுக்கு
துளிகள்
ஒன்றும் புதிதல்ல!
காரணம் சொல்லிவிட்டுப்போ
காணாமல் போய்விடுகிறேன்
இல்லையென்றால்,
இப்படியே உன்னைத்தொடருவேன்
கவிதைகளின் வழியாக...!

Saturday, May 7, 2011

சுமந்து பார்,
கருவை விட
காதல் அதிகமாய் வலி கொடுக்கும்...!

உனக்காக மட்டுமே.....

சில நேர
இடைவெளிகூட
பலமைல்தூர
தொலைவாய் தோன்றும்
உன் சின்ன இதயத்தில்
எனக்கொரு
சிறுபகுதி தருவாயோ...!

உன் கண்பார்வை
கடந்துசெல்ல
ஒரு கணநேரம் மட்டுமே ஆனாலும்
எங்கோ பறந்துபோகிறேன்
எனை அறியாமல் இறந்துபோகிறேன்!

முன்பெல்லாம் ,
சுவாசித்து உயிர்வாழ்ந்தேன்
இப்போதெல்லாம்,
உன்னுடன் வாழ்வதற்காக மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்..........!

சாதகமாய்..........

தூரத்தில் நீ நின்று
வேறெங்கோ பார்த்தாலும்
உன் இதயத்தை தொலைத்துவிட்டு
என்னிடம்தான் தேடுகிறாயோவென்று
நினைத்துக்கொள்கிறேன் நான்
எனக்கு சாதகமாய்............

என்னையேத்தருவேன்...........

கடனாய்

ஒருநாள் உன்னைக்கொடு !

வட்டியாக

என்னையும் சேர்த்துதருகிறேன்

உன்னிடமே ...............!

நீ எனக்குமட்டுமே..!

எத்தனைமுறை

வேண்டுமானாலும்

உன் உதாசினங்களால்

என் உணர்வுகளை ரணமாக்கு,

என்னை தவிர

உன்னை மட்டுமல்ல

உன் நிழலையும் கூட

காதலிக்கும் உரிமை

எவனுக்குமில்லை.....!

சந்தோசமடி.!

சந்தோசமடி,

இப்போதாவது

முகம் காட்ட சம்மதித்தாயே

என் கல்லறைக்குமுன்பாவது...!
சிறகடிக்க

வழியில்லாமல்

சிறைபட்ட பறவையாய்

சிறைவைத்துக்கொள்ளடி (கொல்லடி)

உன் சின்ன இதயத்தில்....!

வா காத்திருப்பேன்

பூக்கள் தோன்ற நேரம் வந்தால்

வண்டு சொல்லும் காதல் ஒன்று!

பூக்கள்போனபின்பு

தொற்றுபோகலம்

அந்த காதலும் கூட அங்கு.

நாட்கள் கூடி

நான் நரை கொண்டு போனாலும்

என்காதல் பூக்குமடி- அங்கும்

உனையே உய்ராய் கொண்டு!!

வாயென்று சொல்லிப்போக

நீ தூரமில்லை என்னை விட்டு!

போயென்று சொல்லிப்போனாள்,

எங்கே போவேன் உன்னைவிட்டு!

காதல்செய்யநீயுமில்லைஎன்னோடு,

வா காத்திருப்பேன்

உயிர் போகும்வரை மண்ணோடு!
அன்பே.....!
எதையோ கேட்டு
அழுகின்ற குழந்தைபோல
உனைக் கேட்டு
அழுகின்றேன்.!

எப்போதும் கேட்கும்
பாடலாய்...
உனைப் பார்த்து
ரசிக்கேறேன்.!

எங்கோ ஒலிக்கும்
மணியோசை கேட்டு
தொழுகின்றவன் போல
எனக்கான
உன் குரல் கேட்க்க
ஒற்றையாய் தவமிருக்கிறேன்.!

மரம் இலை அசைவுகளாய்
என் நினைவுகள் அசையுதடி
உனக்கான பாடல் ஒன்று
எப்போதும்
உயிருக்குள் வந்து இசையுதடி.....!
இரவெல்லாம்
யோசித்து எடுத்த முடிவு இது - ஆம்
இனி எல்லா இரவுகளும்
உனக்குதானென்று.....!
நேசிக்கிறேன்...!
~~~~~~~~~~~~~~~~~
உன்னைவிட
உன் புகைப்படத்தையே
அதிகமாக நேசிக்கிறேன் - ஆம்,
அதில்மட்டும் தானடி
நீ என்னை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்...!
அதிகதூரம் பயணித்துவிட்டேன்
திரும்பி பார்க்கையில்
நிறைய கால்தடங்கள்
சில என்னை துறத்தியவை
சில என்னை தொடர்ந்தவை
இருந்தும் தனிமையில் நான் ......!
பச்சை மரத்தில் ஆணியாய்
பதிந்துபோனது
உன் நினைவுகள்,
பட்டென்று புடுங்கச்சொன்னல் - பாவம்,
உடையதோ என் காதல் சிறகுகள்.!

உனக்கென்ன
கடைசிவரை ஊமையாய் இருந்துவிட்டாய்,
உறவில்லாமல்
என் காதல் உலா வருகிறது
உன்னைத்தேடி..!

உருவம் தந்தாய்
என் காதலுக்கு,
உயிர் தருவதர்க்கென்ன?

யார் யாரோ அழைத்துக்கேட்கிரார்கள்
யாரடா அவளென்று,
உன்னைத்தவிர
யாரிடமும் சொல்லத்தோணவில்லை
நீ தான் என் காதலியென்று..!