Saturday, October 29, 2011

இலையுதிர் கால சருகுகளாய்
எனக்குள் நீ
விழுந்துகொண்டே இருக்கிறாய்
மீண்டும் மீண்டும் முளைப்பதற்காக...!!
காத்திரு.....!
வேகமாய் புறப்பட்டுவிட்டேன்

உன்னை அடைவதற்கு,-ஆம்

மறக்கச்சொன்னாய்

எதை என்பதை கேட்பதற்காக,

என்னை என்றால்
எப்போதோ மறந்துவிட்டேன்;

உன்னை என்றால்
என் மரணம் வரை காத்திரு...!
பெண்ணே....!
இன்னும் அதிகமாக
என்னை காயப்படுத்து,
என் கண்ணீர்த்துளிகளை
சந்தோசப்படுத்த....!
எளிதில்
தீப்பற்றக்குடிய பொருட்களை
பேருந்தில்
ஏற்ற வேண்டாமென்று சொல்லிவிட்டு
ஏனோ?
இத்தனை பெண்களை ஏற்றிச்செல்கிறது
இந்த பேருந்து...!
பெண்களின் சிரிப்பைவிட
இந்த சிகரட் நெருப்பின் எருச்சல்
எவ்வளவோ மேலானது....!
என்னருகில் நீ இருக்க,
எனக்கெதற்கு
இன்னொரு வானம்
இன்னொரு பூமி..!

சொர்க்கம் தூரமென்று
சொன்னவர்கள் யாரோ?

நீ பக்கம் வந்து நின்றால்
சொர்க்கம் எனக்கு கண்ணெதிரே - அடி பெண்ணே,
நீ வெட்கம் காட்டிச்சென்றல்
நிக்குமடி என்மூச்சு உன்னெதிரே..!
இறவை அழைக்கிறேன்
உறக்கத்திற்கு
கனவைத் தருகிறது உன் நினைவாக!

யாரடி சொல்லித்தந்தார்கள் உனக்கு ?

நடை பாதையில் கண்ட போதெல்லாம்
நான் நானப்படுவேன்
உன் முகம் பார்த்துப்பேச
உன் புன்னகையை எனக்களித்து
என் நாணம் பரித்தவளா நீ ?
இப்போது
எனைப்பார்க்கையில்
யாரென்று கேட்கிறாய் ?

முன்னம் ஒருமுறை
என் முகம் பார்க்க அழைத்தாய்
பின்பு ஒருமுறை
அன்னம் கூட எனக்களித்தாய்
இப்படியெல்லாம்
என் எண்ணம் பறித்துவிட்டு
எப்படியடி சொல்லிப்போனாய்
நீ யாரென்று தெரியவில்லையென்று?.

சரிப்போ........

நடந்துப்போனோம்
ஞாபகம் இருக்கிறதா ?
நனைந்தபடி
நம் கல்லூரிப்பாதையில்?

விடுமுறை நாளொன்றில்
விருந்தளித்தையே
உன் கை பேசி வழியே
அதுவும் மறந்து போனதோ உனக்கு ?

ம்ம்ம்ம் .................

புரிந்துப்போனதடி
நீ பூமிக்கு மேலே வானமாய் இருக்கிறாய்,
நான் இன்னும்
பூமியின் மீது புழுதியை இருக்கிறேனென்று..........................!
என் காதலியின் ஆசை
என் காதலின் கடைசி ஆசை..!
அவளின் மண முடிப்பிற்க்கு,
அவள் வாங்கித்தந்த சட்டையை மணந்து வரச்சொன்னாள்...!
உடைந்து போன
என் இதயத்தின் அழுகையை
என் பேனா உணருதடி,
கண்ணீர் சிந்துகிறது கவிதையாய் இங்கே!
தாகம் தீர்க்க வேண்டாம் நீ
தானம் தந்துவிட்டுப்போ உன் பார்வையை
ஒருமுறை போதும்.....
பதில் வராத
வாக்கியத்திற்கு வார்த்தைகள் அமைத்தே
வடிவம் மறைந்து போனது
என் கைபேசியின் எழுத்துக்களுக்கு...!

Friday, October 28, 2011

வலிகள்
அதிகம் கண்ணட விழிகளுக்கு
துளிகள்
ஒன்றும் புதிதல்ல!
காரணம் சொல்லிவிட்டுப்போ
காணாமல் போய்விடுகிறேன்
இல்லையென்றால்,
இப்படியே உன்னைத்தொடருவேன்
கவிதைகளின் வழியாக...!